
தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.


கண்டி (ஒலிப்பு) (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.
ஹந்தனை மலைத்தொடர் என்பது இலங்கையின்மத்திய மலைநாட்டிற்கண்டி மாநகருக்குத் தென்மேற்காக அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது தேசிய சுற்றாடற் சட்டத்தின் கீழ் ஒரு சுற்றாடற் பாதுகாப்புப் பகுதியாக 2010 பெப்ரவரியிற் குறித்துரைக்கப்பட்டது.இம்மலைத்தொடரின் ஆகக் கூடிய உயரம் 3800 அடி. இது ஏழு மலையுச்சிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஆக உயரமான மலையுச்சி ஊரா கந்த என்பதாகும். இம்மலைத்தொடர் இலங்கையின் மலையேறிகளிடையே மிகவும் பெயர் பெற்றதாகும். ஹந்தனை மலைத்தொடருக்கு அணித்தாகவே பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
